search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக காங்கிரஸ் தலைவர்"

    தமிழகத்திலுள்ள உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் மருந்துகள் கொள்முதலில் மிகப்பெரிய அளவில் நடந்த ஊழலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு தொழிலாளர் காப்பீட்டு கழக மருத்துவமனை தொடங்கப்பட்டு 68 ஆண்டுகள் ஆகின்றன. தொழிலாளர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகள் செய்து தருவதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள். ஆனால் அனைத்துதுறைகளிலும் ஊழல் செய்வதை ஒரு முக்கிய வேலையாக கருதி செயல்பட்டு வருகிற அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவத்துறை விதிவிலக்கல்ல.

    தமிழகத்திலுள்ள 65 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் கடந்த ஆகஸ்ட் 2017 முதல் ஜூலை 2018 வரை மருந்துகள் கொள்முதல் செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் வாங்குவதற்கு கொள்முதல் திட்டம் ரூ.13.13 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டது.

    ஆனால் மத்திய மருத்துவ சேமிப்பு கிடங்கின் கண்காணிப்பாளர் மருந்துகளுக்கான கொள்முதல் தொகையை ரூ.40.29 கோடியாக தேவையில்லாமல் உயர்த்தி, தனியார் மருந்து நிறுவனங்களுக்கு கொள்முதல் ஆணை பிறப்பித்திருக்கிறார்.

    இந்த ஆணை பிறப்பித்திருப்பதற்கு பின்னாலே மருத்துவதுறையின் உயர் அதிகாரிகள் செயல்பட்டிருக்கின்றனர். தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட மருந்துகள் கொண்ட நூற்றுகணக்கான அட்டைபெட்டிகள் மதுரை பிராந்திய இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் அலுவலர் அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த அட்டைபெட்டிகளை வைப்பதற்கு இடமில்லாத காரணத்தால் பயன்படுத்தாத கழிவறைகளில் இவை வைக்கப்பட்டுள்ளன.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் ரூ.27.16 கோடிக்கு தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்ததில் நடைபெற்ற ஊழல் குறித்து தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம் விசாரணை தொடங்கியது. ஆனால் அந்த விசாரணை தொடக்க நிலையில் இருந்து எந்த முன்னேற்றமும் அடையவில்லை.

    தமிழகத்தில் அமைய விருக்கிற புதிய ஆட்சியில் தொழிலாளர்களுக்காக நடத்தப்படுகிற இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்காக மருந்து கொள்முதலில் ஊழல் செய்த மருத்துவதுறை அதிகாரிகள் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #KSAlagiri
    மத்திய சென்னையில் இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பேசும் கே.எஸ். அழகிரி, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். #LokSabhaElections2019 #KSAlagiri
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலை யொட்டி காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்களில் பேசுகிறார். அதன் விவரம் வருமாறு:-

    இன்று மாலை 6 மணி மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதி, நாளை (28-ந்தேதி) காலை 11 மணி ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி பிரசார பொதுக்கூட்டம்.

    29-ந்தேதி காலை 11 மணி தேர்தல் பிரசார கையேடு வெளியீடு, சத்தியமூர்த்தி பவன்.

    அடுத்த மாதம் 1-ந்தேதி காலை 11 மணி கடலூர் பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி கடலூர் பாராளுமன்றத் தொகுதி பிரசார பொதுக் கூட்டம், 2-ந்தேதி காலை 11 மணி சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி திருமுட்டம், மாலை 6 மணி பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பிரசார பொதுக்கூட்டம்.

    3-ந்தேதி காலை 11 மணி கரூர் பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி திருச்சி பாராளுமன்ற தொகுதி.

    4-ந்தேதி காலை 11 மணி மதுரை பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி தேனி பாராளுமன்றத் தொகுதி.

    6-ந்தேதி காலை 11 மணி தென்காசி பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி.

    7-ந்தேதி காலை 11 மணி தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி.

    8-ந்தேதி காலை 11 மணி ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதி, மாலை 6 மணி சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி.  #LokSabhaElections2019 #KSAlagiri

    டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை, தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று சந்தித்து பேசினர். #RahulGandhi #KSAlagiri
    புதுடெல்லி:

    தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கும் கே.எஸ்.அழகிரி, செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டு இருக்கும் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நேற்று மாலை டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள்.

    அப்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், சஞ்சய் தத் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்றது.

    இச்சந்திப்பு குறித்து புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தியை சந்தித்து தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பற்றி பேசினோம். தேர்தலில் எப்படி பணியாற்றுவது, கட்சி அமைப்பை எப்படி பலப்படுத்துவது என்பது பற்றி விவாதித்தோம்.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு நசுக்கி விட்டது என்று ராகுல்காந்தியிடம் கூறினோம். அரசு ஊழியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை வழங்கி இருப்பதாக ராகுல்காந்தி சொல்ல சொன்னார். எனவே, அரசு ஊழியர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

    நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணி வெற்றி பெற வேண்டும், அதற்கான பணிகளை செய்யுங்கள் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். தேர்தலில் எங்களுக்கு 100 சதவீத வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

    கோஷ்டி பூசல் என்பதை நீங்கள்தான் (பத்திரிகையாளர்கள்) நினைவூட்டி வருகிறீர்கள். நான் கேட்பது என்னவென்றால், கருத்து வேறுபாடு இல்லாத அரசியல் இயக்கம் எங்காவது இருக்கிறதா?. சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதை கோஷ்டி பூசல் என்று சொல்ல முடியாது.

    திருநாவுக்கரசர் 2½ வருடம் தலைவராக பணியாற்றி இருக்கிறார். அவருக்கு வேறு வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. காங்கிரசில் நிச்சயமாக கோஷ்டி பூசல் இல்லை. கருத்து வேறுபாடு இருப்பதில் எந்த தவறும் இல்லை.

    நாங்கள் நிதர்சனமான அரசியல் கட்சி. தேர்தலில் எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? எங்கெல்லாம் தொண்டர்கள் வேகமாக பணியாற்றுகிறார்களோ? அந்த தொகுதிகளைத்தான் கேட்போம்.

    கூட்டணிக்கு இன்னும் அதிகமான கட்சிகள் வருவார்களானால் அவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டியிருக்கும். நாங்களும், தி.மு.க.வும் மட்டுமே கூட்டணி என்றால் பிரித்துக்கொள்ளலாம். கூட்டணிக்கு இன்னும் ஏராளமான கட்சிகள் வர விரும்புகின்றன. 4 மாநில தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழ்நாட்டில் பல கட்சிகள் எங்கள் கூட்டணியல் சேர விருப்பமாக இருக்கின்றன.

    ராகுல்காந்தி இந்த மாதம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. திருநாவுக்கரசர் தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும்.

    வருகிற 7-ந்தேதி நான் பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறேன். அதற்கு முன்னதாக தலைவர்களை சந்திப்பேன். பதவி ஏற்ற பின்னர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் நிருபர்கள் “தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. சேர இருப்பதாக கூறப்படுகிறதே, அதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்று கேட்டனர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “கூட்டணிக்கு யார்- யார்? வருவார்கள் என்பதையெல்லாம் இப்போதே நாங்கள் சொல்லி விட்டால் நீங்கள் (பத்திரிகையாளர்கள்) சென்று தடுத்து விடுவீர்கள். அதனால் இப்போது சொல்ல முடியாது. நேரம் வரும்போது அவர்கள் வருவார்கள்” என்று கூறினார்.

    முன்னதாக டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில் ‘தமிழகத்தில் ஊழல் அற்ற, மக்களை மேம்படுத்துகிற ஆட்சியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்’ என்று கூறினார்.
    திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்குகள் நிறைவுற்று 8-ம் தேதி மாலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதிக்கு தமிழக மக்களும், தொண்டர்களும் விடிய விடிய அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவின் திருச்சி சிவா முன்வைத்தார்.



    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதும், சென்னை நகரின் பிரதான சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
    காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்ற நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது என திருநாவுக்கரசர் பேசினார். #Congress #Thirunavukkarasar
    திருச்சி:

    திருச்சியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகள், பிரதிநிதிகள், செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சி காங்கிரஸ் தான். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது காங்கிரஸ் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டு விட்டது.

    தினகரன் ஒரு பக்கம் தனியாக கட்சி நடத்துகிறார். அவரது மாமா திவாகரன் மன்னார்குடியில் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இப்படி அ.தி.மு.க.வில் ஏற்பட்டு உள்ள பிளவினால் இரண்டாவது பெரிய கட்சி காங்கிரஸ் தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


    50 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி இன்னமும் தமிழகத்தில் இருக்கிறது என்றால் அதற்கு காமராஜர் போட்ட பலமான அஸ்திவாரம் தான் காரணம். தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த ஆட்சியை காங்கிரஸ் துணை இல்லாமல் வீழ்த்த முடியாது. தமிழகத்தில் என்றாவது ஒரு நாள் காமராஜர் தொண்டன் முதல்-அமைச்சர் ஆவார், இது உறுதி.

    நான் ராகுல் காந்தியால் தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்ற நினைப்பவர்களின் கனவு நிறைவேறாது. தேசிய அளவில் மோடிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரே தலைவர் ராகுல் மட்டுமே. அவரது தலைமையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #Thirunavukkarasar

    ×